Thursday, June 16, 2011

ஏதென்ஸ் நகரில் "மக்கள் மன்றம்", கிரேக்க அரசு நெருக்கடியில்


ஜூன் 15 , அன்று கிரீசில் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது திரண்ட பெருந்திரள் மக்கள், கிரேக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். போலிஸின் வன்முறைத் தூண்டுதல்களுக்கு பயந்து கலைந்து செல்லாமல், முன்றலில் கூடியுள்ளனர். அங்கே தற்போது "மக்கள் பாராளுமன்றம்" அமைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ பாராளுன்றத்தினுள் ஜனநாயகம் கிடையாது. அதற்கு பதிலாக,
தெருவில் கூட ஜனநாயகம் மலரலாம் என்பதை கிரேக்க மக்கள் நிரூபித்துள்ளனர்.
அலையெனத் திரண்ட மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட அரசாங்கம், மந்திரி சபையை கலைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் பங்குபற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப் படும் என்று பிரதமர் Papandreou தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உத்தரவிட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தியதால், கிரேக்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயினும், இந்த நிமிடம் வரையில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட மக்கள், போராட்டத்தை கைவிடவில்லை. அரசாங்கம் மட்டுமல்ல, வங்கிகளும், சர்வதேச நாணய நிதியமும் கிரீசை விட்டு அகல வேண்டும் என்று, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தலைநகர் ஏதென்சில் மட்டுமல்லாது, பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகிய நகரங்களில் உள்ள மேயரின் அலுவலகம், நகராட்சி கட்டிடங்கள் போன்றன சில மணி நேரங்கள் என்றாலும் மக்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. கிரேக்க மக்கள் எழுச்சியின் போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளன.


No comments: