Wednesday, September 02, 2015

சாதாரண மக்களை மன்னர்களாக சித்தரிக்கும் வட கொரிய ஓவியங்கள்


வெளியுலகில் அதிகம் அறியப் படாத "மர்ம தேசம்" வட கொரியாவின் ஓவியங்களை, அண்மையில் ஒரு கண்காட்சியில் பார்வையிடும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கு நான் எடுத்த படங்களை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.


வட நெதர்லாந்தில், அசென் எனும் நகரில் அமைந்துள்ள Drents Museum அந்தக் கண்காட்சியை நடத்தி இருந்தது. "The Kim Utopia"(http://www.drentsmuseum.nl/exhibitions/exhibition-detail/exhibition/the-kim-utopia-paintings-from-north-korea-102.html) என்ற தலைப்பின் கீழ், 2015, 3 ஏப்ரில் முதல் 30 ஆகஸ்ட் வரையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. வட கொரியாவின் புகழ் பெற்ற கலைக்கூடங்களில், திறமையான ஓவியர்களினால் அவை வரையப் பட்டன. 1960 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வரையப் பட்ட ஓவியங்களை, இரண்டு டச்சு வர்த்தகர்கள் சேகரித்திருந்தனர். 

வட கொரிய ஓவியங்களின் கண்காட்சி என்றவுடன், அங்கே "கிம் இல் சுங் மன்னர் பரம்பரையை வழிபடும்" ஓவியங்கள் மட்டுமே இருக்கும் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவார்கள். சாதாரண மக்கள் தான் ஓவியங்களின் கருப்பொருள். 

உழைப்பு போற்றப் பட வேண்டியது. அதனால், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், விமானிகள், காவல் துறையினர், இராணுவ வீரர்கள், போன்ற பல தொழில்களை புரிவோர் காட்சிப் படுத்தப் பட்டிருந்தனர். தந்தை, தாய், பிள்ளைகள் என சாதாரண குடும்ப உறுப்பினர்களின் அன்றாட வாழ்க்கை பதிவாகி இருந்தது. 

மேற்கத்திய நாடுகளில் ஓவியம் என்பது "அரசியலற்ற" கலைப் படைப்பாக கருதப் படுகின்றது. ஆனால், வட கொரிய சமூகத்தில் ஓவியங்களின் பங்களிப்பு முற்றிலும் வேறானது. ஆரம்ப காலங்களில், எழுத வாசிக்க தெரியாத மக்களுக்கும் ஒரு சேதியை தெரிவிக்கும் நோக்கத்தில் வரையப் பட்டன. 

பெரும்பாலும் மக்களுக்கு கல்வி புகட்டுவதாக ஓவியங்கள் அமைந்திருக்கும். அதனால், தேசத்தின் கடந்த கால வரலாறு, அயல் நாடான தென் கொரிய நிலவரம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றை போதிப்பதாக இருக்கும்.

கண்காட்சியில் நான் பார்வையிட்ட ஓவியங்களின் புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளேன். அவை பெரும்பாலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பதாக அமைந்துள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஒரு இராணுவ அதிகாரி, தனக்கு முன்னர் கல்வி கற்பித்த ஆசிரியைக்கு புதிய மூக்குக்கண்ணாடி ஒன்றை பரிசளிக்கிறார். அந்த அதிகாரி, தனது முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றிய ஆசிரியைக்கு நன்றிக் கடனாக இதைச் செய்துள்ளார். எமக்கு கல்வி கற்பித்த, ஆசிரியர்களை மதித்துப் போற்ற வேண்டும், என்ற சேதியை சொல்வதாக இந்த ஓவியம் வரையப் பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------



தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளருடன், தமது தொழில்நுட்ப அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தொழிலாளர்கள் பற்றிய ஓவியம். வட கொரியாவில், கிம் இல் சுங் அறிமுகப் படுத்திய சோஷலிசப் பொரளாதார உற்பத்தியில், எவ்வாறு தொழிலாளர்கள் பொறியியலாளருக்கு உதவுகின்றனர் என்பதைக் காட்டுகின்றது. ஒரு பெண் தொழிலாளி விவாதத்திற்கு தலைமை தாங்குவதை அவதானிக்கவும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


தொழில்நுட்ப ஆராய்ச்சியின் நடுவில், களைத்துப் போய் உறங்கி விட்ட, பொறியியல் படிக்கும் மகனை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை. "மகன்" என்று பெயரிடப் பட்ட இந்த ஓவியத்தை வரைந்தவர், வட கொரிய ஓவியர் Chang Ch'il-lyong
(2000 ம் ஆண்டு)


-------------------------------------------------------------------------------------------------------------------------------------


உப்பளம் ஒன்றில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் பற்றிய வட கொரிய ஓவியம். அடடா... இதெல்லாம் "கம்யூனிச பிரச்சாரம்" ஆயிற்றே? நமது தமிழ் தொழிலாளர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்கள்?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

சோளம் மாவில் இருந்து நூடில்ஸ் தயாரிக்கும், தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் வட கொரிய பெண் தொழிலாளர்கள். தென் கொரியாவில் அரிசி பிரதானமான உணவாக உள்ளது. வட கொரியாவின் மலை சார்ந்த நிலம், அரிசி உற்பத்திக்கு ஏற்றது அல்ல. அதனால், அங்கு அரிசிக்கு பதிலாக, சோளம் மாவில் இருந்து உற்பத்தியான நூடில்ஸ் பிரதான உணவாகி உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் சில படங்கள்:

அலுவலக வரவேற்பறையில் பணியாற்றும் பெண் காவலர் 

பெண் காவலர்கள் 

நீண்ட காலம் சேவையாற்றிய ரயில் ஊழியருக்கு மக்கள் விழா எடுக்கிறார்கள்   

இராணுவத்திற்கான உணவு சமைப்பவர்கள் 

பாடசாலை ஒன்றுக்கு பால் விநியோகம் செய்யும் பெண் 

விவசாய விளைபொருட்களை விநியோகம் செய்வோர் 

வட கொரியாவுடன் ஒன்றிணைவுக்காக பட்டம் விடும் தென் கொரியச் சிறுவன் 

பனிக் காலத்தில் நிலத்தில் உணவு பயிரிட முடியாது. அதனால், உள்ளக பரிசோதனைச் சாலை ஒன்றில் உணவுப் பயிர் உற்பத்தி செய்கிறார்கள். 

கால் பந்து விளையாட்டு வீரர்கள் 


அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஜப்பானிய வீராங்கனையுடன் மோதிய வட கொரிய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார் 

மீனவர்கள் 

வயலும் கிராமமும் 


நல்லதொரு குடும்பம் 


தியாகிகளின் நினைவிடத்தில் ஒரு தந்தையும் மகளும் 

கொரிய யுத்தம் நடந்த காலத்தில் சோவியத் போர் விமானங்களை வரவேற்கும் பெண்கள் 

போர்க் காலத்திலும் கலை உணர்ச்சியை கைவிடாத இராணுவ வீராங்கனை 

ஓய்வு நேரத்தில் ரயில் நிலைய பெண் ஊழியரை பாடச் சொல்லும் இராணுவ வீரர்கள் 

கொரிய யுத்த களத்தில் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கும் தளபதி 

இராணுவ வீரர்கள் 

ஓய்வு நேரத்தில் படையினர் 

கொரிய யுத்தம் நடந்த காலத்தில் படையினருக்கு உணவு எடுத்துச் செல்லும் மக்கள் 


விமானிகள் 

பியாங்கியாங் நகரில் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் 

துப்பாக்கி சுடும் பயிற்சி 


சுற்றுலாப் பயணிகளுக்கு தியாகிகளின் நினைவிடத்தை சுற்றிக் காட்டும் இராணுவ வீரர்கள் 

பனியில் நனையும் சிறுவர்கள் 

பரிசுப் பொருளுடன் உறங்கும் பாடசாலை மாணவி 



ஒரு விவசாயப் பெண்மணியும், ஓர் இராணுவ வீராங்கனையும் வயலில் சேர்ந்து வேலை செய்கின்றனர்.

கொரிய யுத்தம் முடிந்த பின்னர் கைவிடப் பட்ட அமெரிக்க தாங்கியில் விளையாடும் சிறுவர்கள் 

கடுமையான பனிப்  பொழிவின் பின்னர் ஸ்னோ வழிக்க செல்லும் தொழிலாளர்கள் 

தென் கொரியாவில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

உதைபந்தாட்ட மைதானத்தில் இரசிகர்கள் 

தென் கொரியாவில் வீரச் சாவடைந்த சுதந்திரப் போராட்ட வீரரின் கல்லறை 

பியாங்கியாங் நகரம் 

கட்டுமான பணிகளை பார்வையிடும் அதிபர் கிம் இல் சுங் 

கண்காட்சி நடந்த Drents Museum முன்புறம் 

No comments: